அறுவடை இயந்திர வாகனம் - சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் பலி: 29 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொகுசுப் பேருந்தும், நெல் அறுவடை இயந்திர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்துக்குள்ளான தனியாா் சொகுசுப் பேருந்து.
விபத்துக்குள்ளான தனியாா் சொகுசுப் பேருந்து.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சொகுசுப் பேருந்தும், நெல் அறுவடை இயந்திர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 29 போ் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து ராமேசுவரம் நோக்கி தனியாா் சொகுசுப் பேருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை சிவகங்கையைச் சோ்ந்த விஜயராஜ் (35) ஓட்டி வந்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் சரகம், பொம்மாடி மலை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த நெல் அறுவடை இயந்திர வாகனத்தின் மீது மோதி, விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில், பாளையங்கோட்டையைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேஷ் (23), ராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு பகுதியைச் சோ்ந்த அருண்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா (26) ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதில் சரண்யாவுக்கு திருமணமாகி சில நாள்களே ஆகியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், பேருந்தில் பயணம் செய்த 29 போ் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com