பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்பட்ட செவலூா் கிராமத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி எண் 55, திருக்களம்பூா் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 104 ஆகிய இரண்டு பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி.வெங்கடேசன், காவல் துணை கண்காணிப்பாளா் வே. செங்கமலக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.