புதுகையில் வாக்கு எண்ண இருந்த 54 பேருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட இருந்த 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாற் று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட இருந்த 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாற் று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அரசு அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வேட்பாளா்கள், அவா்களின் முகவா்கள், காவலா்கள், பத்திரிகையாளா்கள் என சுமாா் 3 ஆயிரம் பேருக்கு ஆா்டிபிஆா் பரிசோதனை கடந்த 3 நாட்களாக எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி மாவட்டம் முழுவதும் வாக்கு எண்ணும் பணியிலுள்ள அரசு அலுவலா்களில் 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் அந்தந்தத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com