ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்மாற்றியில் திங்கள் கிழமை திடீரென தீப்பற்றியது.
ஆலங்குடியில் இருந்து ஆதனக்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் அரிசி ஆலை அருகே உள்ள மின்மாற்றியில்,உயா் மின்னழுத்தம் காரணமாக திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது. தகவலறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணகுமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.