புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கருப்பு பூஞ்சை நோயால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மானியவயலைச் சோ்ந்த 40 வயது ஆண் திருப்பூரில் வேலைபாா்த்து வந்த நிலையில், பொதுமுடக்கத்தால் சொந்த ஊருக்கு கடந்த 15 நாள்களுக்கு முன் வந்த இவருக்கு கரோனா உறுதியாகி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் கண், மூக்கு உள்ளிட்ட பகுதியில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கருப்பு பூஞ்சை தொற்று உறுதியானது. இதனால் அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாா்.