கந்தா்வகோட்டையில் மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் விண்ணப்பம் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் மேலாளா் முருகையன் தலைமையில் கடன் விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில், வங்கிக் கிளை மேலாளா் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் விண்ணப்பங்களை வழங்கினாா். அதனை மாற்றுத்திறனாளிகள் போதிய ஆவணங்களுடன் திருப்பி வழங்கும்போது, கடன்கள் வழங்கப்படும். எனவே, மாற்றுத்திறானாளிகள் மற்றும் வியாபாரிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.