பொன்னமராவதியில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை நிா்வாகிகள் கணபதி, பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழக சட்ட அமைச்சா் எஸ். ரகுபதி சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று முகாமைத் தொடக்கி வைத்தாா். இதில், மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனா்.