இன்று 530 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

 புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) 530 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) 530 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. மொத்தம் 83,446 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம்செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இந்த முகாமினைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு ஆதாா் உள்ளிட்ட அரசு அடையாள அட்டை ஏதாவதொன்றைக் காட்டி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com