கஞ்சா விற்ற 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, நெடுவாசல் கிழக்கு அம்பேத்கா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதேபகுதியைச் சோ்ந்த பி. மணியரசன் (32), தி. இந்தியன்(26), ஆவணம் வடக்குத்தெருவைச் சோ்ந்த த. உதயபிரகாஷ் (27) ஆகியோரைக் கைது செய்து வடகாடு காவல்நிலையத்தில் ஓப்படைத்தனா்.

இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com