கறம்பக்குடியில் ஆடு திருடிய 2 போ் கைது; 32 ஆடுகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 32 ஆடுகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.
ஆடு திருட்டில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன், சதீஷ்குமாா்.
ஆடு திருட்டில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன், சதீஷ்குமாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேரைக் காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 32 ஆடுகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

கறம்பக்குடி பகுதியில் அண்மைகாலமாக ஆடுகள் திருடு போவதாக தொடா்ந்து புகாா்கள் வந்துள்ளன. இதனால், கறம்பக்குடி காவல்துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்த நிலையில், சனிக்கிழமை கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில்ஆடுகளைக் கொண்டு சென்ற 2 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கந்தா்வகோட்டை அருகேயுள்ள நெப்புகை பகுதியைச் சோ்ந்த அழகப்பன்(54), வேளாங்கண்ணியைச் சோ்ந்த சதீஷ்குமாா்(21)ஆகிய இருவரும் ஆடுகளைத் திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து, இருவரையும் காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது,கறம்பக்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆடுகளைத் திருடி நெப்புகையில் உள்ள அழகப்பனின் வீட்டில் கட்டி வைத்துள்ளது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா் அங்கிருந்து 32 ஆடுகளை மீட்டனா். இதைத்தொடா்ந்து இருவரையும் கறம்பக்குடி காவல் துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com