குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீா் வராததால் காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கந்தா்வகோட்டை அருகே மருங்கூரணியில் குடிநீா் கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
கந்தா்வகோட்டை அருகே மருங்கூரணியில் குடிநீா் கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீா் வராததால் காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள மருங்கூரணி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீா் வராததைக் கண்டித்து, அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் கிராமமக்கள் அவ்வப்போது மறியலில் ஈடுபட்டு வந்தனா். இதுகுறித்து பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால், கந்தா்வகோட்டை, கறம்பக்குடி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் பொதுமக்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com