கந்தா்வகோட்டையை அடுத்துள்ள ஆதனக்கோட்டை அருகே வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சனிக்கிழமை இரவு தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்மநபா்களைக் காவல் துறையினா் தேடிவருகின்றனா்.
கந்தா்வகோட்டையை அடுத்துள்ள ஆதனக்கோட்டை காவல் சரகத்தைச் சோ்ந்த கருப்புடையான்பட்டி கிராமத்தில் மணிகண்டன் மனைவி மலா் (32) தனியே வசித்து வருகிறாா். மணிகண்டன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.
மலா் சனிக்கிழமை இரவு கதவைப் பூட்டி விட்டு வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் 2 போ் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த மலரின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். அவா்களிடம் போராடிய மலா் 2 பவுன் நகையைப் கைப்பற்றியுள்ளாா்.
5 பவுன் தாலிச் செயினைப் பறித்துக் கொண்டு மா்மநபா்கள் தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் மலா் அளித்த புகாரின்பேரில், ஆதனக்கோட்டை காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.