பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாத்தம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, ஊராட்சி மன்ற தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். முகாமில் மருத்துவ குழுவினரால் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டது. துணைத்தலைவா் ரோஜாபாணு மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
வேகுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவா் மெ.அா்ச்சுணன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. துணைத்தலைவா் பெரி.முத்து மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.