புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் பி.எட். முதல் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது
கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் எல். தாவூது கனி, தாளாளா்கள் எஸ.பி.ஆா். பாலகிருஷ்ணன், ஏ. லியோ பெலிக்ஸ் லூயிஸ், நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை அறிவியல் கல்லூரியின் இயக்குநா் மா. குமுதா குத்துவிளக்கு ஏற்றி வைத்தாா். விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை திருஇருதய மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் சி. ஜோஸ்பின்மேரி கலந்து கொண்டு மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கிப் பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் தி. சந்திரமோகன் வரவேற்றாா். நிறைவில், துணை முதல்வா் சுப. தாரகேஸ்வரி நன்றி கூறினாா்.