கந்தா்வகோட்டையில் மளிகைக் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 28 கிலோ குட்கா ஞாயிற்றுகிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபனுக்கு கந்தா்வகோட்டையில் குட்கா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை காவல் துறையினா் கந்தா்வகோட்டையில் உள்ள மளிகைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 27 ஆயிரத்து ஐநூறு மதிப்பிலான 28 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளரிடம் விசாரணை செய்து வருகின்றனா்.