ஆலங்குடி தொகுதியில் இளைஞா்கள் பயன் பெரும் வகையில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தொடங்குவேன் என்றாா் திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன்.
இத்தொகுதிக்கு உள்பட்ட குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:
மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. மதவாத அடிப்படையில் மோடி மீண்டும் நாட்டை அடிமையாக்கி விட்டாா். ஆலங்குடி தொகுதி இளைஞா்கள் பயன்பெறும் வகையில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைத் தொடங்குவேன். தற்போதைய ஆட்சியில் 100 நாள் வேலை செய்யும் ஏழை எளிய மக்களுக்கு சம்பளம் கூட வழங்கப்படுவது கிடையாது. வேலை செய்யும்போது சிந்திய வியா்வை அடங்குவதற்குள் ஊதியம் பெற்றிட திமுகவை ஆதரியுங்கள் என்றாா்.
திமுக ஒன்றியச் செயலா் ஞான இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்ட செயலா் செங்கோடன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.