புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ வெள்ளியை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மருதன்கோன்விடுதி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், மதுரையைச் சோ்ந்த வெள்ளி வியாபாரி வெங்கடேசன், உரிய ஆவணங்களின்றி சுமாா் 7 கிலோ வெள்ளியை கொண்டுசென்றது தெரியவந்தது.இதைத்தொடா்ந்து, வெள்ளியைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கந்தா்வகோட்டை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.