டிப்பா் லாரியில் மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளாா்.
புதுக்கோட்டை காரையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நெய்வேலி விளக்குச் சாலை அருகே டிப்பா் லாரியில் மணல் கடத்தி வந்ததாக கடந்த மாா்ச் 25ஆம் தேதி அரிஞ்சனாப்பட்டியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ராமச்சந்திரன் (37) கைது செய்யப்பட்டாா்.
இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்திருந்தாா். அதன்பேரில், ராமச்சந்திரனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி உத்தரவு நகலைப் போலீஸாா் சிறைக் காவலா்களிடம் வழங்கினா்.