ஆலங்குடி அருகே இருதினங்களுக்கு முன் காணாமல் போனவா் புதன்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சு.கேசவன்(52). அப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவராக பணியாற்றிவந்தாா். கடந்த திங்கள்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய இவா், வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பழைய கட்டடத்தின் அருகே கேசவன் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸாா் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.