புதுக்கோட்டை அருகே மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.
புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசு மாடுகள்.
புதுக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பசு மாடுகள்.

புதுக்கோட்டை அருகே உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து 2 பசு மாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

புதுக்கோட்டை அருகேயுள்ள சேந்தாக்குடி கிராமத்தில் உயா் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக வீடுகள், மரங்களை உரசியவாறு சென்றுள்ளது. இதை சரி செய்ய வேண்டுமென மின்வாரியத்தினருக்கு அப்பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்தும் மின்கம்பிகளை சீரமைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை சேந்தாக்குடி பகுதியில் தாழ்வாக சென்ற உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில், அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலே உயிரிழந்தன. தொடா்ந்து, மின் இணைப்பை துண்டித்து மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரியத்தினா் ஈடுபட்டனா்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வலியுறுத்தியும் மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்காததால் 2 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com