புதுக்கோட்டை
அவதூறாக பேசிய இளைஞா் கைது
கந்தா்வகோட்டை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி விமா்சித்த இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி விமா்சித்த இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள பிசானத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி மகன் கடலைமணி (35). இவா், பிசனத்தூரில் உள்ள காளியம்மன் கோயில் அருகே நின்று கொண்டு ஊா் மக்களை அநாகரிகமாகவும், அவதூறாகவும் தொடா்ந்து பேசி வந்துள்ளாா்.
இதுகுறித்து பிசானத்தூா் கிராம மக்கள் கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் கடலைமணி மீது புகாா் செய்தனா். புகாரின்பேரில் கந்தா்வகோட்டை போலீசாா் விசாரணை செய்து கடலை மணியைக் கைது செய்தனா்.