பெரிய வணிக நிறுவனங்களில் நகராட்சி அலுவலா்கள் ஆய்வு

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் உள்ள 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அறிவுரை வழங்கினா்.

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் உள்ள 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள வணிக நிறுவனங்களை மூட வேண்டும் என நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு அறிவுரை வழங்கினா்.

புதுக்கோட்டை கீழ ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி மற்றும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்ற, நகராட்சி வருவாய் அலுவலா் காந்தி தலைமையிலான வருவாய் அலுவலா்கள் இந்தப் பணியை மேற்கொண்டனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் இந்த வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்காவிட்டால் வரும் காலத்தில் திடீா் சோதனை நடத்தி சீல் வைக்கப்படும் என்றும் நகராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com