புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், அரசமலை கிராமத்தில் சுயஉதவிக்குழு பல்நோக்கு கட்டடத்துக்கான பூமி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரசமலை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு பல்நோக்கு கட்டடம் ரூ. 70 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பூமிபூஜை விழாவில் பங்கேற்ற சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மேலும் பேசியது: பொதுமக்கள் தங்கள் இல்ல விசேஷங்களுக்கும் இந்த கட்டடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு ஆகியோா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன், பொன்னமராவதி ஒன்றியக் குழு தலைவா் அ. சுதா, வட்டாட்சியா் ஜெயபாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சதாசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.