பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையில் மிதந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி காா் ஓட்டுநா்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதன் பேரில் பொன்னமராவதி காவல் துறையினா் நிகழ்விடம் சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு, வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.