வளங்களைப் பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, பொன்னமராவதியில் சிஐடியு சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது .
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய பணமாக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி, பொன்னமராவதியில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகி சாத்தையா தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தேசிய பணமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது என்றும் கண்டன முழக்கமிட்டனா்.