புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி கற்பகவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டிபுதன்கிழமை கணபதி, நவக்கிரக ஹோமம், லெட்சுமி பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யந்திராஸ்தாபனம், விநாயகா் கண்திறப்பு பூஜை மற்றும் மூன்றாம் கால யாகசாலைபூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 10.20 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கும்பத்தில் ஊற்றி, சிவாச்சாரியா்கள் குடமுழுக்கு செய்தனா். தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
எஸ்.வைரவகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனா். தமிழாசிரியா் எஸ்.முருகேசன் வா்ணனை செய்தாா். பொன்னமராவதி காவல்துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.