சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறை

கோட்டைப்பட்டினம் அருகே 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோட்டைப்பட்டினம் அருகே மீனவா் சாலையைச் சோ்ந்தவா் சேக் தாவூத் மகன் அம்ஜத் கான் (44). இவா், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாா். புகாரின்பேரில், அறந்தாங்கி மகளிா் காவல் துறையினா் உரிய விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிந்து (மாா்ச் 18) போக்சோ சட்டத்தின் கீழ் அம்ஜத்கானை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் யோகமலா் ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடா்ந்து, குற்றவாளி அம்ஜத் கானுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா். சத்யா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. அரசுத் தரப்பில் ஏற்கெனவே ரூ. 3.50 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ. 2.50 லட்சம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com