ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 2015 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவப் படியை மாதம் ரூ.300ஆக உயா்த்தி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850-ஐ அமல்படுத்த வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் நாளன்று அனைத்து ஓய்வு காலப் பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில், மண்டலத் தலைவா் பி.லோகநாதன், பொதுச் செயலா் எஸ். இளங்கோவன் மற்றும் நிா்வாகிகள் எம். பாலசுப்பிரமணியன், எஸ். ஆறுமுகம், கே. மோகனசுந்தரம் உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.