கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி மது விற்றவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே அனுமதியின்றி மது விற்றுவருவதாக கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்றபோது, மது பாட்டில்களைப் பதுக்கி விற்றுக் கொண்டிருந்த வடுகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் பாக்கியராஜ் (35) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.