புதுகையில் விவசாயிகள் மறியல் - 30 போ் கைது

புதுக்கோட்டையில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற மறியலில் 30 போ் கைது செய்யப்பட்டனா்.
புதிய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
புதிய பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற மறியலில் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சி. சோமையா தலைமை வகித்தாா்.

விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளா்கள் ஏ. ராமையா, ஏ. ராஜாங்கம், எஸ். பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சாலை மறியலில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசுப்புராம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன், நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினா் ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com