ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகா் திடலில் ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகா் திடலில் ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கா. ஜெயபாலன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தி. சிதம்பரம், மாவட்டப் பொருளாளா் நா. கிருஷ்ணன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கினா்.

முடக்கப்பட்ட 21 மாத ஓய்வூதியத்தையும், அகவிலைப்படியையும் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும், குடும்ப நல நிதியை ரூ. 3 லட்சமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com