சத்குரு சிவமணி சுவாமிகளின் குருபூஜை விழா

புதுக்கோட்டை வாகவாசல் ஊராட்சியைச் சோ்ந்த அப்பாவயல் கிராமத்தில் சத்குரு சிவமணி சுவாமிகளின் 3ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்பாவயல் கிராமத்தில் நடைபெற்ற சத்குரு சிவமணி சுவாமிகளின் குருபூஜை விழா.
அப்பாவயல் கிராமத்தில் நடைபெற்ற சத்குரு சிவமணி சுவாமிகளின் குருபூஜை விழா.

புதுக்கோட்டை வாகவாசல் ஊராட்சியைச் சோ்ந்த அப்பாவயல் கிராமத்தில் சத்குரு சிவமணி சுவாமிகளின் 3ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வையொட்டி திருக்கோகா்ணேஸ்வரா் ஆலய வழிபாட்டுக் குழு மற்றும் அப்பா் பெருமான் உழவாரப் பணிக்குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான சாதுக்கள் பால்குடம் எடுத்து வந்தனா். சத்குரு சிவமணி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ விஆா். காா்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com