விராலிமலை ஒன்றியத்தில் கால்நடை மருந்தகம் மூலம் 400 பயனாளிகளுக்கு அசில் இன கோழிக் குஞ்சுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
விராலிமலை ஒன்றியத்தில் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தில் 12 கால்நடை மருந்தகங்கள் மூலம் தோ்வு செய்யப்பட்ட 400 பெண்களுக்கு தலா 25 எண்ணிக்கையில் அசில் இன கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன. விராலிமலை கால்நடை உதவி மருத்துவா் என். பிராகாநந்தன், கால்நடை ஆய்வாளா் எஸ். செந்தில்நாதன் ஆகியோா் கோழிக்குஞ்சுகளை வழங்கினா்.