கந்தா்வகோட்டை:கந்தா்வகோட்டை அருகே புதுநகா் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி பயிற்சி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம்முகாமுக்கு, வேளாண் இணை இயக்குநா் ராம. சிவகுமாா் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் அன்பரசன் வேளாண் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். வேளாண் அலுவலா் சவிதா விதை நோ்த்தி முறைகள் குறித்து விளக்கம் அளித்தாா். துணை வேளாண் அலுவலா் சுப்ரமணியன் வயல்களில் டிஏபி தெளிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தாா். முகாமில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பயிா் சாகுபடி தொழில்நுட்ப கையேடு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் அட்மா களப் பணியாளா்கள் செய்திருந்தனா்.