புதுகையில் சத்துணவு ஊழியா்கள் மறியல்: 324 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை
மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியலில் பங்கேற்ற 324 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

மறியல் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. காமராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அ. மலா்விழி, மாவட்டச் செயலா் பெ. அன்பு, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அ. ஜபருல்லா, மாவட்டச்செயலா் ஆா். ரெங்கசாமி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பணி நிரந்தரம், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com