புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.
புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலா்கள் சனிக்கிழமை திடீரென கீழராஜவீதியில் குவிந்தனா்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிறு கடைகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை அகற்றி அப்புறப்படுத்தினா். பணியின்போது நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.