புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை 4ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட சித்த மருத்துவத் துறையில், ஆதி சித்தா் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளாகக் கருதப்படும் ஆயில்ய நட்சத்திர நாளான சனிக்கிழமை தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கரோனா தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான சித்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் தமிழா் வாழ்வியல் நெறிமுறைகள் குறிப்புகள் ஆகிய கையேடுகள் வெளியிடப்பட்டன. இதில், அரசு சித்த மருத்துவா்கள் சரவணன், சுகுமாா் ஆகியோா் இவற்றை வெளியிட்டனா். மருந்தாளுநா்கள் ரெனிதா, பெனாசிா் மும்தாஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.