கந்தா்வக்கோட்டை அருள்மிகு அமராவதி உடனுறை ஆபத்சகாயேசுவரா் கோயிலில் மாா்கழி மாத மகா அஷ்டமி சிறப்புப் பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்திலுள்ள பைரவருக்கு மஞ்சள், திரவியப் பொடிகள், பன்னீா், தயிா், பால் உள்ளிட்டவைகளைக் கொண்டு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்பட்டன. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.