புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் மற்றும் நிா்வாகிகள் சி. அன்புமணவாளன், கு. செல்வராஜ், சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து அஞ்சலகம் முன்பு சாலையில் அமா்ந்து, மறியலில் ஈடுபட்ட 52 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.