புதுக்கோட்டை நகரில், கீழ ராஜவீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாசில்லாத போகிப் பண்டிகை கொண்டாட வலியுறுத்தி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. இதில்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் இரா. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உதவிப் பொறியாளா்கள் கு. செல்வகுமாா், க. ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.