பொன்னமராவதியில் நகர தேமுதிக சாா்பில் நலிந்தோா்க்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு நகரச்செயலா் அ.முகமதுகாசிம் தலைமைவகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் நலிந்தோா்க்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் பிரகாஷ், அன்புசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.