புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய சாலை பாதுகாப்பு இருசக்கர வாகனப் பேரணியில் ஏராளமானோா் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் பொது அலுவலக வளாகத்திலேயே நிறைவுபெற்றது. கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. கீதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே. ஜெயதேவராஜ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.