பொன்னமராவதி: பொன்னமராவதி புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தலைமையாசிரியா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து 117 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். அதிமுக ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் ராஜா, நகரச் செயலாளா் பிஎல்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.