புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் சாா்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வல்லத்திராக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான சி. விஜயபாஸ்கா் போட்டிகளுக்குத் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலா் ப. கருப்பையா வரவேற்றாா்.
முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் வி.சி. ராமையா, ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம், குமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 24 அணிகள் பங்கேற்றன. செவ்வாய்க்கிழமை வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. அன்று மாலை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
முதல் இடத்தைப் பெறும் அணிக்கு ரூ. ஒரு லட்சம், இரண்டாம் இடத்துக்கு ரூ. 70 ஆயிரம், மூன்றாம் இடத்துக்கு ரூ. 50 ஆயிரம், நான்காம் இடத்துக்கு ரூ. 30 ஆயிரம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.