தில்லியில் பேராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஆலங்குடியில் விவசாய சங்கத்தினா், இடதுசாரிக் கட்சியினா் டிராக்டரில் தேசியக்கொடியை கட்டிக்கொண்டு பேரணியாகச் சென்றனா். காமராஜா் சிலை அருகே காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் டிராக்டா் பேரணியை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் மு. மாதவன், முன்னாள் மாவட்டச்செயலா் த.செங்கோடன், ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.