உச்ச நீதிமன்றத் தீா்ப்பு எதிராக காவிரியில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சிகளைக் கண்டித்து, புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை காலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ராமையன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் கே. சண்முகம், விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள், மாவட்டச் செயலா் எஸ். பொன்னுசாமி உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.