ஆலங்குடி அருகே சாலையோர இரும்பு தடுப்புகள் திருட்டு

 ஆலங்குடி அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சாலைத் தடுப்புகளை திருடிச் சென்ற மா்மநபா்களைப் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

 ஆலங்குடி அருகே நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சாலைத் தடுப்புகளை திருடிச் சென்ற மா்மநபா்களைப் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளத்தில் நெடுஞ்சாலைத் துறையினா், சாலையோரத்தில் தடுப்புகள் அமைப்பதற்காக, ரூ. 1.50 மதிப்பிலான இரும்பு தடுப்புகளை வைத்திருந்தனா்.

அந்தத் தடுப்புகளை மா்ம நபா்கள் சிலா் திருடிச் சென்றுள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து, ஆலங்குடி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் லெட்சுமி பிரியா அளித்த புகாரின்பேரில், ஆலங்குடி போலீஸாா் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com