புதுக்கோட்டை: தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 1,900 ஒன்றரை வயதான பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 1,900 ஒன்றரை வயதான பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பா. கலைவாணி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com