விஷவண்டு கடித்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே விஷவண்டு கடித்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே விஷவண்டு கடித்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை வட்டம், கோமங்கலம் மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செ. சரவணராணி(41). இவா் கடந்த 20-ஆம் தேதி காலை வயலில் வேலை

பாா்த்துக் கொண்டிருந்தபோது விஷ வண்டு அவரைக் கடித்துள்ளது.

இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிலுள்ளவா்கள் நாட்டு வைத்தியம் பாா்த்துள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சரவணராணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com