தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் முழு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றாா் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவா் தமீமுன் அன்சாரி.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
ஜனநாயக அடிப்படைகளைப் பலகீனப்படுத்தும் வகையில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளா்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளா்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ள விவகாரத்தில் முழு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி வலியுறுத்துகிறது.
மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். செயல்படாமல் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வைக்க வேண்டும் என்றாா் தமீமுன் அன்சாரி.